Tuesday 20 July 2010

புதிய சிம் கார்ட் வாங்கப்போகிறீர்களா..? எச்சரிக்கை

இலங்கையில் வீடு வீடாகவும், சந்திகளிலும் மும்முரமாக நடைபெறுவது மொபைல் போன்களுக்கான சிம் கார்ட் விற்பனைதான்
நீங்கள் புதிதாக ஒரு சிம் கார்ட் வாங்கி இருக்கின்றீர்களா ? அப்படியானால் உங்களது பெயரிலே இன்னும் ஒருவரும் சிம் கர்ட் வைத்திருக்க கூடும். எப்படி ?
நீங்கள் சிம் கார்ட் வங்கும் பொழுது உங்களது அடையாள அட்டைப்பிரதியை கொடுத்திருப்பீர்கள். ஒருவருடைய Identy Card Number ற்கு ஒரே நிறுவனத்தின் மூன்று சிம் கார்ட்களைத் பதிவுசெய்ய முடியும். நீங்கள் வாங்கியதோ ஒரு சிம்கார்ட். ஆனால் உங்களுக்கு சிம் தந்தவர் உங்களது பெயரிலே மீதி இரண்டு சிம்களை பதிவு செய்து Stand By ஆக வைத்துக்கொள்வார். இந்த சிம்களை
Miss Call செய்வதற்கும், அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களுக்கும், தமது நண்பர்களுக்கும் விற்றுவிடுகின்றனர்.
பிறகு உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டில் சில்மிஷம் செய்து அகப்பட்டு உங்களை பொலீஸ் தேடிவரும் வரை உங்களுக்குத் தெரியாது. அதற்கு முன்பே இப்போதே உங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்புகொண்டு உங்களது அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து உங்கள் பெயரில் வேறு சிம்கள் இயங்குகின்றனவா ? என்பதை சரி பார்த்துக்கொள்ளவும். இனிமேல் சிம்கள் வாங்கும் போது அங்கிகரிக்கப்பட்ட சிம் விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்குங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home