Tuesday 21 September 2010

இணையத்தில் பணமீட்ட முதல் படி

இன்று உலகில் நாளுக்கு நாள் பெருகி வரும் சனத்தொகை போல இணையத்தள பாவனையாளர்களும் நாளுக்கு நாள் பெருகிய படியே இருக்கின்றனர். இணையத்தளம் எனும் மாபெரும் சமூகத்தில் விற்பனை, கொள்முதல், லாபமீட்டல் போன்ற சகல ந‌டவடிக்கைகளும் தங்கு தடையின்றி தொடர்கின்றன. இச்சந்தையில் பணமீட்டுவதென்பது நமக்கும் சாத்தியமான விடயமே. அதற்கான நடைமுறைகள் மிகவும் சாத்தியமானதும் எளிதானதும் ஆகும். அவற்றை கற்றுதருவதே இந்த தளத்தின் நோக்கம் ஆகும்.

இணையத்தில் பணமீட்ட நமக்கு முதலாவதாக தேவையானது நாம் சம்பாதிக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள நமது பெயரில் உள்ள ஒன்லைன் அக்கவுன்ட் ஆகும். இந்த ஒன்லைன் அக்கவுன்டுகளிற்கு பணத்தை பெற்றுக்கொள்வதன் மூலமே நாம் அந்தப் பணத்தை செக் ஆகவோ அல்லது பணமாகவோ எமது வங்கிக்கணக்குக்கு பெற்றுக்கொள்ள முடியும். தற்பொழுது பல தளங்கள் இந்த ஒன்லைன் அக்கவுன்டுகளை இலவசமாக வழங்குகின்றன.
உதாரணமாக‌

அலேர்ட் பே ("AlertPay")
பேய்பால்
மணிபுக்கர்ஸ் என்பவற்றை குறிப்பிடலாம்.

இதில் நாம் பரிந்துரைப்பது அலேர்ட்-பே ஆகும். இது இலகுவானதும் இலவசமானதும் ஆகும். எமது பணப்ப‌ரிமாற்றங்களின்போது உச்சகட்ட உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் இந்த தளம் வழங்குகின்றது.

அலெர்ட்-பே யில் அக்க‌வுண்ட் ஆரம்பிப்பது மிகபவும் இலகுவான செயல்முறை ஆகும். இதற்குத் தேவை நீங்கள் பாவிக்கும் ஒரு ஈ மெயில் முகவரி மாத்திரமே.
உங்கள் அலெர்ட்‍‍பே கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பின்பு உங்கள் ஈ மெயில் முகவரியே உங்கள் அலெர்ட் பே முகவரியாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் வங்கிக் கணக்குக்கு ஒரு க‌ணக்கிலக்கம் இருப்பது போல உங்கள்அலெர்ட்-பே கணக்குக்கு நீங்கள் பதிவு செய்த ஈ மெயில் முகவரியே பயன்படுத்தப்படும்.

அலெர்ட் பே அக்கவுண்டில் உள்ள பணத்தை நீங்கள் செக் ஆகவோ அல்லது வங்கிக்கணக்குக்கு பணமாகவோ அல்லது ஒன்லைனில் வேறு பொருட்கள் சேவைகளை வாங்குவதற்காகவோ பயன்படுத்தலாம்.

எனவே தாமதிக்காமல் கீழுள்ள படத்தில் கிளிக் செய்து உங்களிற்கான இலவச அலேர்ட்பே அக்கவுண்டை பதிவு செய்யுங்கள்..



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home