Monday 25 October 2010

கூகுள் குரோம் 7ஆம் பதிப்பு வெளியீடு

கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.

இவ் பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மற்றும் அப்பள் ஸ்ரிப்பான(AppleScript) மெக்(Mac) இயங்கு தளங்களுக்கு இயக்க முடியும்.

முன்தைய பதிப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் பிழைகள் இவ் பதிப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய


Thursday 7 October 2010

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

Wednesday 6 October 2010

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...

moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ..

உங்கள் கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவியிருந்தால் Start மெனு கிளிக் செய்து அதில் Run என்பதை தேர்வு செய்யுங்கள்

அதில் ஒரு புள்ளி Dot வைத்து என்டர் தட்டினால் நீங்கள் எந்த யூசராக நுழைந்தீர்களோ அதன் போல்டர் திறக்கும்.





இரண்டு புள்ளி வைத்தால் டாக்குமென்ட்ஸ் அன்ட் செட்டிங்க்ஸ் Documents and Settings போல்டர் திறக்கும்.

மூன்று புள்ளி வைத்து என்டர் தட்டினால் My Computer மை கம்ப்யூட்டர் திறக்கும்.

வெறும் \ பேக் ஸ்லாஷ் கொடுத்து என்டர் தட்டினால் உங்களுடைய C ட்ரைவ் திறக்கும்.






படங்களை பார்த்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.



Tuesday 5 October 2010

குடும்ப மருத்துவர் நம் வீட்டில்

நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும். அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ், அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.

இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம். இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக். மென்பொருளை தரவிறக்க சுட்டி



Read more: http://www.gouthaminfotech.com/2010_08_01_archive.html#ixzz11YNcnSDn
Under Creative Commons License: Attribution

உங்களின் கணினி எந்திரத்தின் வேகத்தை கூட்ட வேண்டுமா சூப்பர் மென்பொருள்

நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோ கோப்புகளை உயர்தர (HD) வீடியோ கோப்பாகவும், வீடியோ கோப்பிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க, டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பாகவும் மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படுத்தலாம்.

இந்த மென்பொருளின் பெயர் ஐடூல்சாப்ட் வீடியோ ரிப்பர் இந்த மென்பொருள் அக்டோபர் 10ஆம் தேதிவரை இலவசமாக தரவிறக்க தரப்படுகிறது. இதை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி தளத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் கீழே இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம்.

Register Name: giveaway@itoolsoft.com
Register Code: r4--KT--RF--gu--Ch--sV--aR--EV--1o--9f





Register Name: giveaway@itoolsoft.com
Register Code: 2a--Ml--jH--Qi--zz--fg--NT--bQ--u2--NT
இந்த தரவிறக்க சலுகை அக்டோபர் 10ஆம் தேதி வரை மட்டுமே நண்பர்களே




நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.


இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.

இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.