Friday 5 October 2012

சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியர் தினம் இன்றாகும்!


மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.
வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.
இன்று பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.
இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும்.
அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்பதனை திருக்குறளின் முதல் கவிதையாக அமைத்துள்ளார் வள்ளுவர். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவை.
இவ்வாறாக மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.
ஒக்டோபர் 05 ‘உலக ஆசிரியர் தினம் World Teacher’s Day’ உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்’ என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.
இத் தினம் கொண்டாப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. சில நாடுகளில், கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட ஆசிரியரின் முக்கியத்துவத்தை மையப்படுத்திய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இன்னும் சில நாடுகளில் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிப் பாசறைகள், ஆசிரியர் தொழில் வழங்கும் ஏற்பாடுகள் (பல்கலைக் கழக மாணவர்களுக்கு அல்லது தகைமையுள்ளவர்களுக்கு) மற்றும் ஊடகங்களில் ஆசிரியரின் வகிபாகத்தை தரமுயர்த்துவதற்கான நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன. ஆசிரியர் தினத்தையொட்டி சில நாடுகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுவதுடன், வாழ்த்து மடல்கள், மின் வாழ்த்தட்டை (e-card) போன்றவை அன்பளித்தல் பரவலாக நடைபெறுகின்றது. சில பாடசாலைகள் ஆசிரியர்களுக்கு உணவு விருந்தளிப்பதும் காணப்படுகின்றது.
பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.
இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.
இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி ‘உலக ஆசிரியர் தினத்தை’ கொண்டாடுகின்றன. வெவ்வேறு தினங்களில் இத் தினத்தை கொண்டாடும் சில நாடுகளை நோக்குவோம்:
தாய்லாந்து – ஜனவரி 16 : 1956 ஆம் வருடம் முதல் கொண்டாடப்படும் இத்தினம் பாடசாலை விடுமுறை தினமாகும்.
ஈரான் – மே 02 : 1980 மே மாதம் 02 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னூல் ஆசிரியரும், ஓய்வில்லா ஆசானுமாகிய பேராசிரியர் ஆயதொல்லா மொர்தாஸா மொதாஹ்ஹரி அவர்களை நினைவு கூறும் முகமாகவே இத் தினத்தை ஈரானியர்கள் தமது ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இத் தினத்தில் மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு மலர்ச் சென்டுகளை வழங்குவர்.
ஐக்கிய அமெரிக்கா : மே மாதத்தின் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமை இத் தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் உத்தியோகபற்றற்ற விடுமுறை நாளாகக் கருதப்படும். வாரம் முழுவதும் கலகலப்பான விழாக்கோல பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மலேசியா – மே 16 : ஆசிரியர் தினத்தை ‘ஹரி குரு’ என்ற பெயரிலும் அழைப்பர். நாடு முழுவதும் மிக உற்சாகத்துடன் விமரிசையாகக் கொண்டாடுவர். எனினும் அன்றைய தினம் விடுமுறை நாள் அல்ல.
சீனா : 1931 இல் தேசிய மத்திய பல்கலைக் கழகம் ஆசிரியர் தினத்தை ஸ்தாபித்தது. பிறகு சீனாவின் தத்துவஞாணி கொன்பியூசின் பிறந்த தினமான ஓகஸ்டு 27 க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பிறழ்வுகளினால் மீண்டும் அது செப்டம்பர் 10 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றைய சீனர்களில் பெரும்பான்மையினர் மீளவும் கொன்புயூசியசின் பிறந்த தினத்திற்கு (ஒகஸ்டு 27) கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.
இந்தியா – செப்டெம்பர் 5 : இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான கலாநிதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாரது பிறந்த நாளில் ஆசிரியர் தினமும் கொண்டாடப்படுகின்றது.
இந்தோனீசியா : 2012 ஆம் ஆண்டுக்குரிய உலக ஆசிரியர் தின கூற்றாக ‘எனது ஆசான் – எனது வீரன்’ (My Teacher, My Hero) எனப் பிரகடணப்படுத்தி, செப்டெம்பர் 05 – ஒக்டோபர் 05 வரை ‘உலக ஆசிரியர் மாதம்’ என்றும் பிரகடணப்படுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.
ரஷ்யா : 1965 முதல் 1994 வரை ஓக்டோபர் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினர். 1994 இன் பின் உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து ஓக்டோபர் 05 ஆம் திகதி கொண்டாடுகின்றனர்.
துருக்கி – நவம்பர் 24 : எனினும் இதுவொரு விடுமுறை தினம் அல்ல.
பல்வேறு கண்டங்களில் ஆசிரியர் தினம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் நிவ்சீலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடுவதில்லை என்ற தகவல் சற்று அசாதாரணமாகவே இருக்கின்றது.
இத் தலைப்பின் போக்கினை சற்று வித்தியாசப்படுத்தி, சில ஆசிரியர்களும் சில பெற்றோர்களும் இந்த ஆசிரியர் தினத்தை உபயோகிக்கும் விதம் குறித்து ஆக்கபூர்வ விமர்சனப் பார்வையுடன் நோக்க வேண்டிய தேவையும் உள்ளது.
சில பெற்றோர்கள் தமது பிள்ளையின் வகுப்பாசிரியருக்கு ‘அளவில் பெரிய – அதிக விலை’ பொருட்களை தனது பிள்ளையின் கைகளினால் வழங்கிவைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. அவரவர் சமய கலாசாரம் அநுமதிக்கும் விதத்தில் வணக்கம் செலுத்துவதிலும் தவறில்லை. எனினும் வறிய ஏழை மாணவர்கள் ஏக்கத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகும் விதமாக இவ்வாறான அன்பளிப்புக்களை வகுப்பறையில் வழங்குவதை விட பாடசாலை அலுவலகத்திலோ அல்லது உரிய ஆசிரியரின் இல்லத்திலோ வழங்கிவைப்பது முன்னரை விட சிறப்பானதாக இருக்கலாம்.
சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் சிரிப்பிக்கும் விசனத்திற்கும் உரியது. வகுப்பு மாணவர்களிடம் பணம் சேகரித்து குறிப்பிட்ட பொருட்களை வாங்கி தனக்கு அன்பளிப்பு செய்யுமாறு கூறிய கோமாலிகளும் உண்டு. இன்னும் சிலர் தமக்குக் கிடைத்த அன்பளிப்புக்களை ஆசிரியர் மேசையின் மேல் ‘காட்சி’க்கு வைத்து ஏனைய ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு.
அவர்களில் சிலர் தனக்குள் எரியும் நெருப்பை தமது வகுப்பு மாணவர்களின் மேல் கொட்டிய கொடூரமும் நடந்துள்ளது.
ஒரு சில பெற்றோரும் சில ஆசிரியர்களும் நடந்துகொள்ளும் பொருத்தமற்ற இச் செயற்பாடுகளினால் மாணவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றமை இவ்விடம் கவலையுடனும் கண்டிப்புடனும் நோக்கப்பட வேண்டிய விடயங்களாகும். மேற்சொன்ன பிழையான முன்னுதாரணங்களை பெற்றோர் – ஆசிரியர் சமூகங்கள் எதிர்வரும் ஆசிரியர் தினத்திலிருந்து தவிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இருபக்க விடயங்கள் இவ்வாறிருக்க தந்தையர் தினம், தாய்மார் தினம் போன்ற தினங்களுக்குக் கிடைத்துள்ள (இலங்கையில் குறைவானாலும்) விளம்பரமும் பிரபல்யமும் ஆசிரியர் தினத்திற்குக் கிடைக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அன்பளிப்பு செய்வதற்கென தயாரிக்கப்பட்ட விற்பனைப் பொருட்களும் காண்பதற்கு அரிது. ஒரு வகையில் காதல் எனும் மனித உணர்வை சந்தைப் பொருளாகி (Valentine’s Day) கேவலப்பட்டது போன்று ‘கல்வி வியாபாரி’ அல்லாத உத்தம ஆசான்களின் மரியாதை சந்தையில் விற்கப்படாமை நன்மையாகவே தோன்றுகின்றது.
எத் தேசமாயினும், எக் காலப் பிரிவாயினும், எம் மனித சமூகமாயினும் ‘ஆசிரியர்’ என்ற பிரிவினர் இரண்டு கருத்துக்கு இடமில்லாமல் மரியாதைக்குரியவர்களே. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.
அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான் !!

Thursday 4 October 2012

ஸ்டீவ் ஒரு சகாப்தம்!


இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இதே திகதி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியது.
ஸ்டீவ் தனது 56 ஆவது வயதில் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார்.
ஜொப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரின் ஆயுட்காலம் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. என்ற போதிலும் இச்செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப உலகமே சற்று ஆடித்தான் போனது. 
உலகம் முழுவதிலும் உள்ள அப்பிள் பாவனையாளர்கள் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மக்கள் வீதிகளிலும், அப்பிள் ஸ்டோர்களின் முன்னாலும் ஸ்டீவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர்.
அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலகத் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஸ்டீவிற்கு தங்களது அனுதாபச்செய்தியினை ஊடகங்களின் மூலமாக வெளியிடத் தொடங்கினர்.
அப்பிளின் போட்டி நிறுவனங்களின் தலைவர்களும் கூட ஸ்டீவ் ஜொப்ஸிற்கு தமது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர். 
ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக இணையத்தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்தன. 

ஸ்டீவ் ஜொப்ஸ் 
 இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.
 ஸ்டீவின் தந்தையின் பெயர் அப்துல்பதா ஜோன் ஜண்டாலி. அவர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பெயர் ஜொஹான் கெரோல் சீகிபில்.
 இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முன்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார். 
 எனினும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
 கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் தம்பதியினர் அதுவரை பெயரிடப்படாத தமது குழந்தைக்கு ஸ்டீவன் போல் ஜொப்ஸ் என பெயரிட்டனர்.
 ஸ்டீவின் வளர்ப்புத்தந்தையான போல் ஓர் இயந்திரவியலாளர். அவர் தனது இயந்திரவியல் மற்றும் இலத்திரனியல் அறிவை ஸ்டீவிற்கு சிறுவயது முதலே ஊட்டத் தொடங்கினார்.
 தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி முதலானவற்றை எவ்வாறு கழற்றிப் பூட்டுவது என்பது தொடர்பில் ஸ்டீவிற்கு ஜொப்ஸ் கற்றுத்தந்தார்.
அவர்களது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் இலத்திரனியல் பொருட்களுடன் விளையாடும் சிறுவனாக ஸ்டீவ் மாறியதுடன் இதுவே அவருக்கு பின்னாளில் இலத்திரனியல் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படவும் காரணமாயிற்று.
இளமைக்காலத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பட்டப்படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டவர் ஸ்டீவ்.
இதன்பின்னர் சிறிது காலம் ஆன்மீக வாழ்க்கையை நாடிய ஸ்டீவ் தன் நண்பரான வொஸ்னியாக்குடன் சேர்ந்து அப்பிள் நிறுவனத்தைத் தனது வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தார்.
 பல வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களைப் போன்று இவரும் தனது கண்டுபிடிப்புக்களை தனது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கிய தருணங்கள் :
------------------------------------------------------------------------------------------------------------------------
 1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு  விற்பனைக்கு வந்தது.
 1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்பட்டது. த அப்பிள் ஐ கணனி அறிமுகப்படுத்தப்பட்டது.
 1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.
 1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாகத் தனது பங்குகளை வெளியிட்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக்    கொண்டது.
 1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரித்தது.
 1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும்  வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகினர்.
  1986: ஜொப்ஸ், 'நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட கணனிகளை  பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத் தொடங்குகினார்.
 1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு வந்தது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.
 1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை  உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.
 பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்தின.
 ஜொப்ஸ், லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.
 1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன்  அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.
 1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகப பதவியேற்கின்றார்.
 2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
 2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.
 இவ்வாறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும்  ஸ்டீவ், தொழிநுட்ப உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2004  ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.
 ஸ்டீவ்வின் வாழ்க்கை முடிந்தது எனப் பலரும் தெரிவித்த போதிலும் தனது பணியினை சரிவரச் செய்வதிலிருந்து அவர் தவறவில்லை.  ஜொப்ஸ் 2006 ஆம் ஆண்டு  டிஸ்னி நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளைக் கொண்ட தனி நபரானார்.
 இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிட்டது.  கையடக்கத்தொலைபேசி வரலாற்றையே மாற்றிய அமைத்த சாதனமாக இதைக் குறிப்பிடலாம். அனைவரதும் அமோக வரவேற்பினைப்  பெற்ற இது விற்பனையிலும் சாதனை படைத்தது.
 அப்பிளின் ஆதிக்கம் தொழிநுட்ப உலகின் உச்சத்தை அடைந்து கொண்டிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜொப்ஸ் சிறுநீரக மாற்றுச்  சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
 2010, 2011 காலப்பகுதியில் ஸ்டீவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.  இதனையடுத்து 2011 ஜனவரி 17 அன்று ஜொப்ஸ்  2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவித்தமையானது ஸ்டீவ் தனது ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தை  அடைந்து விட்டதனைக் காட்டியது.
இதன் அடுத்தபடியாக 2011 ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின்னர் ஜொப்ஸை வெளியுலகினர் யாரும் காணமுடியாமல் போனதுடன் அவர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை
 இந்நிலையில் 2011 ஒக்டோபர் 5 ஆம் திகதி  ஜொப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.
 எனினும் அவரின் பூதவுடலின் புகைப்படம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
 மக்கள் விரும்பியதை உருவாக்கி சந்தையில் வெற்றி பெறுபவர் ஒரு ரகம் என்றால் தாம் உருவாக்கியதை மக்கள் விரும்பச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில் ஸ்டீவ் ஜொப்ஸ் இரண்டாவது ரகம்.
 அப்பிளின் புரட்சிகரக் கண்டுப்பிடிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள வைத்தவர் ஸ்டீவ்.
 ஸ்டீவ் கடும்போக்காளர், பிடிவாதக்காரர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது எனினும் தனது புரட்சிகர கண்டிபிடிப்புக்களை மற்றையோர் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது இலகுவானதொரு காரியம் அல்ல. இதனையே ஆங்கிலத்தில் 'You need to be rebellious to be innovative' என்று கூறுவார்கள்.
 தனது நவீன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இது அவரை சற்று கடும்போக்காளராகக் காட்டியது உண்மையே.
 எனினும் நாம் ஸ்டீவ் என்ற பெயரைச் சொன்னவுடன் ஞாபகம் வருவது அவரது கண்டிபிடிப்புகளே அன்றி அவரது குணாதியசங்கள் அல்ல.
 ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமையை யாரும் மறுக்கமுடியாது.  தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் உள்ளமைக்குக் காரணம் இவரது உழைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனையே ஆகும்.
 ஸ்டீவ் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அவர் அக்கறை கொண்டிருந்தார். 
 ஸ்டீவ் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்ததுடன் கண்டுபிடிப்பாளர், முயற்சியாளர், சிறந்த தலைவர், சிறந்த சந்தைப்படுத்துனர், சிறந்த பேச்சாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 "பசித்திரு. முட்டாளாயிரு" (Stay Hungry, Stay Foolish)  என்ற ஸ்டீவின் அறிவுரையானது பல விடயங்களை எமக்குக் கற்றுத்தருகின்றது அதாவது பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைச் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.
 இது போன்ற பல அர்த்தமுள்ள அறிவுரைகளை உலகிற்கு வழங்கியுள்ள ஸ்டீவின் மறைவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்.
 தற்போது நாம் உபயோகப்படுத்தும் கணனி, குரலை இணங்காணும் தொழிநுட்பமான 'Siri' , இணையம் போன்ற பல தொழிநுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில் ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார்.
 இத்தகைய தூரநோக்கு சிந்தனையுடன் தொழிநுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் காலப்பகுதியிலேயே எதிர்வு கூறியவர்களில் ஸ்டீவ் ஜொப்ஸ் முதன்மையானவர்.
 ஜொப்ஸ் மறைந்த போதிலும் அவரின் ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர்  போன்ற ஒரு புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட, தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட, தன்னம்பிக்கையின் முழு உருவமானதொரு நபரை தொழில்நுட்ப உலகம் மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே!

ஸ்டீவ் ஒரு சகாப்தம்!


இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இதே திகதி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியது.
ஸ்டீவ் தனது 56 ஆவது வயதில் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார்.
ஜொப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரின் ஆயுட்காலம் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. என்ற போதிலும் இச்செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப உலகமே சற்று ஆடித்தான் போனது. 
உலகம் முழுவதிலும் உள்ள அப்பிள் பாவனையாளர்கள் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மக்கள் வீதிகளிலும், அப்பிள் ஸ்டோர்களின் முன்னாலும் ஸ்டீவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர்.
அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலகத் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஸ்டீவிற்கு தங்களது அனுதாபச்செய்தியினை ஊடகங்களின் மூலமாக வெளியிடத் தொடங்கினர்.
அப்பிளின் போட்டி நிறுவனங்களின் தலைவர்களும் கூட ஸ்டீவ் ஜொப்ஸிற்கு தமது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர். 
ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக இணையத்தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்தன. 

ஸ்டீவ் ஜொப்ஸ் 
 இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.
 ஸ்டீவின் தந்தையின் பெயர் அப்துல்பதா ஜோன் ஜண்டாலி. அவர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பெயர் ஜொஹான் கெரோல் சீகிபில்.
 இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முன்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார். 
 எனினும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
 கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் தம்பதியினர் அதுவரை பெயரிடப்படாத தமது குழந்தைக்கு ஸ்டீவன் போல் ஜொப்ஸ் என பெயரிட்டனர்.
 ஸ்டீவின் வளர்ப்புத்தந்தையான போல் ஓர் இயந்திரவியலாளர். அவர் தனது இயந்திரவியல் மற்றும் இலத்திரனியல் அறிவை ஸ்டீவிற்கு சிறுவயது முதலே ஊட்டத் தொடங்கினார்.
 தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி முதலானவற்றை எவ்வாறு கழற்றிப் பூட்டுவது என்பது தொடர்பில் ஸ்டீவிற்கு ஜொப்ஸ் கற்றுத்தந்தார்.
அவர்களது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் இலத்திரனியல் பொருட்களுடன் விளையாடும் சிறுவனாக ஸ்டீவ் மாறியதுடன் இதுவே அவருக்கு பின்னாளில் இலத்திரனியல் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படவும் காரணமாயிற்று.
இளமைக்காலத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பட்டப்படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டவர் ஸ்டீவ்.
இதன்பின்னர் சிறிது காலம் ஆன்மீக வாழ்க்கையை நாடிய ஸ்டீவ் தன் நண்பரான வொஸ்னியாக்குடன் சேர்ந்து அப்பிள் நிறுவனத்தைத் தனது வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தார்.
 பல வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களைப் போன்று இவரும் தனது கண்டுபிடிப்புக்களை தனது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கிய தருணங்கள் :
------------------------------------------------------------------------------------------------------------------------
 1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு  விற்பனைக்கு வந்தது.
 1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்பட்டது. த அப்பிள் ஐ கணனி அறிமுகப்படுத்தப்பட்டது.
 1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.
 1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாகத் தனது பங்குகளை வெளியிட்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக்    கொண்டது.
 1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரித்தது.
 1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும்  வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகினர்.
  1986: ஜொப்ஸ், 'நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட கணனிகளை  பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத் தொடங்குகினார்.
 1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு வந்தது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.
 1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை  உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.
 பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்தின.
 ஜொப்ஸ், லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.
 1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன்  அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.
 1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகப பதவியேற்கின்றார்.
 2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
 2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.
 இவ்வாறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும்  ஸ்டீவ், தொழிநுட்ப உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2004  ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.
 ஸ்டீவ்வின் வாழ்க்கை முடிந்தது எனப் பலரும் தெரிவித்த போதிலும் தனது பணியினை சரிவரச் செய்வதிலிருந்து அவர் தவறவில்லை.  ஜொப்ஸ் 2006 ஆம் ஆண்டு  டிஸ்னி நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளைக் கொண்ட தனி நபரானார்.
 இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிட்டது.  கையடக்கத்தொலைபேசி வரலாற்றையே மாற்றிய அமைத்த சாதனமாக இதைக் குறிப்பிடலாம். அனைவரதும் அமோக வரவேற்பினைப்  பெற்ற இது விற்பனையிலும் சாதனை படைத்தது.
 அப்பிளின் ஆதிக்கம் தொழிநுட்ப உலகின் உச்சத்தை அடைந்து கொண்டிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜொப்ஸ் சிறுநீரக மாற்றுச்  சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
 2010, 2011 காலப்பகுதியில் ஸ்டீவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.  இதனையடுத்து 2011 ஜனவரி 17 அன்று ஜொப்ஸ்  2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவித்தமையானது ஸ்டீவ் தனது ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தை  அடைந்து விட்டதனைக் காட்டியது.
இதன் அடுத்தபடியாக 2011 ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின்னர் ஜொப்ஸை வெளியுலகினர் யாரும் காணமுடியாமல் போனதுடன் அவர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை
 இந்நிலையில் 2011 ஒக்டோபர் 5 ஆம் திகதி  ஜொப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.
 எனினும் அவரின் பூதவுடலின் புகைப்படம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
 மக்கள் விரும்பியதை உருவாக்கி சந்தையில் வெற்றி பெறுபவர் ஒரு ரகம் என்றால் தாம் உருவாக்கியதை மக்கள் விரும்பச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில் ஸ்டீவ் ஜொப்ஸ் இரண்டாவது ரகம்.
 அப்பிளின் புரட்சிகரக் கண்டுப்பிடிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள வைத்தவர் ஸ்டீவ்.
 ஸ்டீவ் கடும்போக்காளர், பிடிவாதக்காரர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது எனினும் தனது புரட்சிகர கண்டிபிடிப்புக்களை மற்றையோர் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது இலகுவானதொரு காரியம் அல்ல. இதனையே ஆங்கிலத்தில் 'You need to be rebellious to be innovative' என்று கூறுவார்கள்.
 தனது நவீன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இது அவரை சற்று கடும்போக்காளராகக் காட்டியது உண்மையே.
 எனினும் நாம் ஸ்டீவ் என்ற பெயரைச் சொன்னவுடன் ஞாபகம் வருவது அவரது கண்டிபிடிப்புகளே அன்றி அவரது குணாதியசங்கள் அல்ல.
 ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமையை யாரும் மறுக்கமுடியாது.  தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் உள்ளமைக்குக் காரணம் இவரது உழைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனையே ஆகும்.
 ஸ்டீவ் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அவர் அக்கறை கொண்டிருந்தார். 
 ஸ்டீவ் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்ததுடன் கண்டுபிடிப்பாளர், முயற்சியாளர், சிறந்த தலைவர், சிறந்த சந்தைப்படுத்துனர், சிறந்த பேச்சாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 "பசித்திரு. முட்டாளாயிரு" (Stay Hungry, Stay Foolish)  என்ற ஸ்டீவின் அறிவுரையானது பல விடயங்களை எமக்குக் கற்றுத்தருகின்றது அதாவது பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைச் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.
 இது போன்ற பல அர்த்தமுள்ள அறிவுரைகளை உலகிற்கு வழங்கியுள்ள ஸ்டீவின் மறைவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்.
 தற்போது நாம் உபயோகப்படுத்தும் கணனி, குரலை இணங்காணும் தொழிநுட்பமான 'Siri' , இணையம் போன்ற பல தொழிநுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில் ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார்.
 இத்தகைய தூரநோக்கு சிந்தனையுடன் தொழிநுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் காலப்பகுதியிலேயே எதிர்வு கூறியவர்களில் ஸ்டீவ் ஜொப்ஸ் முதன்மையானவர்.
 ஜொப்ஸ் மறைந்த போதிலும் அவரின் ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர்  போன்ற ஒரு புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட, தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட, தன்னம்பிக்கையின் முழு உருவமானதொரு நபரை தொழில்நுட்ப உலகம் மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே!